பொன்மாலை பொழுது - நடுவுல கொஞ்சம் வெட்கத்தை காணோம்

வியாழன், 29 ஆகஸ்ட் 2013 (11:23 IST)
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் காயத்ரி தேம்பி தேம்பி அழுதது இந்தப் படத்தில் பாடல்கள் வெளியீட்டு விழாவில்தான். ஏன் அழுதார்? எதற்கு அழுதார்? யாரால் அழுதார்? எந்த பதிலும் தெரியாமல் வெளியாகிறது பொன்மாலை பொழுது.
FILE

படத்தின் முதல் விஷயம், மறைந்த கவியரசர் கண்ணதாசனின் பேரன், ஆதவ் கண்ணதாசன் இதில் நடிகராக அறிமுகமாகிறார். அவர்தான் ஹீரோ. இளம் நடிகரையும், காயத்ரி போன்ற நடிகையையும் வைத்து ரூபாய் மதிப்பு சரிந்ததையா சொல்ல முடியும்? வழக்கம் போல காதல்கதைதான். என்ன வெறும் காதலா? காரமா எதுவும் இல்லையா என் கேட்பவர்களுக்காக தந்தை - மகன் உறவையும் பிரதானப்படுத்தியிருக்கிறார்கள்.

கிஷோர், அனுபாமா குமார், அருள்தாஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சி.சத்யாவின் பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் ஹிட். ஏ.சி.துரை இயக்கியிருக்கிறார். காயத்ரி முதல்முறையாக கவர்ச்சியாக நடித்திருக்கும் படம். ரஷ் பார்த்து, கொஞ்சம் ஓவரா போயிட்டேன் என்று அவரே வெட்கப்பட்டிருக்கிறார். குளியல் காட்சி, நெருக்கமான காதல் காட்சி என்று செம ட்ரீட் காத்திருக்கிறது.

நாளை வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் ஒளிப்பதிவு. பிரமாதமாக வந்திருக்கிறதாம். ஒளிப்பதிவு செய்திருப்பவர், ராஜவேல் ஒளிவீரன்.

வெப்துனியாவைப் படிக்கவும்