பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Siva

வெள்ளி, 19 ஜூலை 2024 (11:37 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்குச்சந்தை காலையில் சரிந்து இருந்தாலும் மாலையும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய பங்குச்சந்தை காலை வர்த்தகம் தொடங்கியது முதலில் சரிந்து உள்ளது என்பதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 317 புள்ளிகள் குறைந்து 81024 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 175 புள்ளிகள் குறைந்து 25656 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், எச்.சி.எல் டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.டி.எப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


Edited by Siva

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்