மீண்டும் உச்சம் சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 66000ஐ தாண்டியது..!

வியாழன், 13 ஜூலை 2023 (10:13 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உச்சத்திற்கு சென்றதை அடுத்து சென்செக்ஸ் 66 ஆயிரத்தை தாண்டி உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை இன்று 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 66 ஆயிரத்து 35 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்பாட்டி 180 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 19565 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
இதே ரீதியில் சென்றால் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்