மும்பை பங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

திங்கள், 19 அக்டோபர் 2015 (16:42 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று வாரத்தின் முதல் நாளான இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 64.73 ரூபாயாக உள்ளது.


 

அந்நிய செலாவணிச் சந்தையில் ஏற்றுமதியாளர்களால் இந்தியாவில் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரித்து காணப்பட்டதால் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய் உயர்ந்து 64.81 ரூபாயாக இருந்தது. 
அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்படும் உயர்வின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடன் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 82.66 புள்ளிகள் உயர்ந்து 27,305.62 புள்ளிகளாகவும், இந்திய பங்குச்சந்தையான நிப்டி 12.10 புள்ளிகள் உயர்ந்து 8250.25 புள்ளிகளாக தற்போது இருக்கிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்