சென்செக்ஸ் 54,532 புள்ளிகளை கடந்து புதிய சாதனை

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:33 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 

 
அந்த வகையில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 54,532 புள்ளிகளை கடந்து புதிய சாதனை பெற்றுள்ளது. சென்செக்ஸ் பிற்பகலில் 254 புள்ளிகள் அதிகரித்து 54,532 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67 புள்ளிகள் உயர்ந்து 16,306 புள்ளிகளில் வர்த்தமாகியுள்ளது.
 
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் முழுவதும் மீண்டு வருவதை அடுத்து பொருளாதாரமும் எழுச்சி பெற்று உள்ளதால் பங்குச் சந்தையும் உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்