மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 960 புள்ளிகள் வரை சரிந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 311 புள்ளிகள் சரிவை கண்டது. இந்தத் திடீர் வீழ்ச்சியால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான எல்லை போர் பதற்றமும் சந்தையில் ஒருவித நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாகப் பங்குகளை விற்பனை செய்ததால் சந்தை தொடர்ந்து சரிவை நோக்கி சென்றது.