தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 7,844ல் வர்த்தகம் முடிவடைந்தது. மும்பை சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரித்து 25,804ல் வர்த்தகம் இன்று மாலை முடிந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளில் ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகளின் விலை உயர்ந்துள்ளன. மேலும், டாடா ஸ்டீல், ஹண்டால்கோ, உள்ளிட்ட நிறுவன பங்கு விலையும் இன்றைய பங்குச் சந்தையில் ஏற்றம் அடைந்துள்ளன.