பங்குச்சந்தை 299 புள்ளிகள் சரிவு

வெள்ளி, 12 ஏப்ரல் 2013 (16:38 IST)
இன்றைய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று காலை ஏற்ற இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை, நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில் சென்செக்ஸ் 299.64 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18243 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 65.45 புள்ளிகள் சரிந்து 5529 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில் ஐடிசி லிட், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ மற்றும் ஹிந்துஸ்தான் யூனியன் லிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், இன்போசிஸ், விப்ரோ, கோல் இந்தியா, டிசிஎஸ் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனுன் நிறைவடைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்