முதலில் முருங்கைப்பூவை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் நெய்யை விட்டு, அதில் முருங்கைப்பூவைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை, நன்றாக நறுக்கி கொள்ளவும்.
மேலும் பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக வேக வைக்கவும். அதில் நெய்யில் வதக்கிய பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிட்டு வெந்ததும் உப்பு சேர்க்கவும்.