காதல்(?!) நகைச்சுவை கதைகள்

வியாழன், 12 பிப்ரவரி 2009 (17:20 IST)
காத‌‌லநகை‌ச்சுவைக‌ளஏராள‌மஉ‌ண்டு. அவவெறு‌மநகை‌ச்சுவை‌க்காம‌ட்டுமே. அ‌ந்ரக‌த்‌தி‌லதா‌னஇவையு‌மசேரு‌ம்.

காதலிக்கும்போது காதலி பேசுவாள், காதலன் கேட்பான்.

திருமணத்திற்குப் பிறகு காதலன் பேசுவான், காதலி கேட்பாள்.

webdunia photoWD
சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பேசுவார்கள். ஊரே கேட்கும்.


வாய்ப்பு கிடைத்தால்

ஒரு வங்கியில் கொள்ளையன் வங்கியை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவனிடம் நான் வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆம் என்றான்.

உடனே கொள்ளையன் அவனை சுட்டுவிட்டான்.

webdunia photoWD
பிறகு ஒரு ஜோடியிடம் வந்து பெண்ணிடம் நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த பெண் நான் பார்க்கவில்லை. ஆனால் இவர் பார்த்துவிட்டார் என்றாள்.

தம்பதிகளின் விருப்பம்

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.

webdunia photoWD
பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.