‘மாட்டுக்குத் தீனி போட்டால், கன்னுக்குட்டியும் சேர்ந்து கிடைக்குதே…’ என்று மகிழ்ந்து போயிருக்கிறார் தயாரிப்பாளர். வம்பு சொன்னபடியே இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். இந்த இடத்தில்தான் ஒரு சிக்கல். ‘அவர் மட்டும் ரெண்டு தடவை ரிலீஸ் பண்ணி காசு பார்ப்பாரு, உங்களுக்கு ஒரு சம்பளம்தானா?’ என்று வம்புவுக்கு கொம்பு சீவி விட்டிருக்கிறார் அடிப்பொடிகள். எனவே, இன்னொரு படத்துக்கான சம்பளத்தைக் கேட்டு விரைவில் பஞ்சாயத்தைக் கூட்டலாம் வம்பு நடிகர் என்கிறார்கள்.