ஆப்கானிஸ்தான் படத்தின் முதல் பாகத்தை எடுத்த போதே, அந்த பட்ஜெட்டில் இரண்டாம் பாகத்தின் பாதி படப்பிடிப்பை முடித்தார் பூமி நாயகன். அத்துடன் இரண்டாம் பாகத்தை விருது கம்பெனிக்கு பெரும் தொகைக்கு விற்று எக்ஸ்ட்ரா கல்லாவும் கட்டினார்.
இந்நிலையில், நானும் கம்பெனியும் திவால் என்று மஞ்சக்கடுதாசி கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர். அவர் ஆப்கானிஸ்தானின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவார் என்ற நம்பிக்கை பூமி நாயகனுக்கு போய்விட்டது. ரொம்பவும் தாமதித்தால் படம் பழங்கஞ்சியாகிவிடும். அதனால், படத்தை தானே வாங்கி வெளியிடும் முடிவுக்கு வந்திருக்கிறார்.