ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறிய நடிகை - நடந்தது என்ன?

வியாழன், 20 ஏப்ரல் 2017 (18:58 IST)
சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த நம்பன் ஒன் நடிகை தற்போது அதை காலி செய்து விட்டு, தனது வீட்டிற்கே திரும்பி விட்டார் என செய்தி வெளியாகியுள்ளது.


 

 
தற்போது, தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை அவர்தான். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவதால், அனைத்து முன்னணி ஹீரோக்களும் இவருடன் ஜோடி போடுவதையே விரும்புகின்றனர். தற்போது அவர் தனக்கு முக்கியத்துவம் இருப்பது மாதிரியான படங்களில் நடித்து வருகிறார்.
 
இவர் சமீபத்தில் சென்னையில், ஒரு புதிய வீடு வாங்கி தனது காதலருடன் வாழ்ந்து வந்தார். அங்கிருந்தே படப்பிடிப்பிற்கு சென்றார். அதன்பின் ஏதோ காரணத்திற்காக அவர் வீட்டிலிருந்து வெளியேறி, ஒரு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். அதன்பின் அங்கிருந்து படப்பிடிப்பிற்கு சென்று வந்தார். 
 
இந்நிலையில், தற்போது அந்த ஹோட்டலில் அவர் தங்காமல், தான் வாங்கிய வீட்டிலேயே தங்குகிறாராம். முதலில் ஏன் வீட்டிலிருந்து வெளியேறி, ஹோட்டலுக்கு சென்று தங்கினார். பின் ஏன், அங்கிருந்து வெளியேறி, தனது வீட்டிற்கே திரும்பி வந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்