தொழில்நுட்பத்தோடு, பாதுகாப்பிற்கும் குறையில்லாமல் ஜாகுவார் லேண்ட்ரோவரின் தானியங்கி காரை தயாரித்துள்ளது. சமதளப் பரப்பான சாலைகளில் மட்டுமல்ல, கரடு முரடனா காட்டு வழிப் பாதை, மலைச் சரிவுகளில் கூட தானியங்கி காரை அளித்திருக்கிறது.
360 டிகிரி கோணத்திலும் சாலையைக் கண்காணித்து வாகனத்தை இயக்கும் வகையிலான தொழில்நுட்பம், கேமராக்கள், அல்ட்ரா சோனிக் தொழில்நுட்பம், ரேடார், லைடார் சென்சார்கள் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக காருக்கு முன்னால் சிறு கல் இருந்தால் கூட தெரிந்துவிடும்.