4ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்

செவ்வாய், 10 ஏப்ரல் 2012 (17:01 IST)
FILE
இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 4ஜி தொழில்நுட்பத்திலான அதிவிரைவு வயர்லெஸ் இணைய சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.

4ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் முதன்முதலாக கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.

இந்த தொடக்க விழாவில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கலந்துகொண்டு சேவையை தொடங்கி வைத்தார்.

4ஜி தொழில்நுட்பம் மூலம் நடமாட்டத்தில் இருக்கும்போது, விநாடிக்கு 100 மெகாபிட்ஸ் அளவு பதிவிறக்க வேகத்தை பெற முடியும். அதேசமயம் நிலையான இடத்தில் இருந்து பயன்படுத்தும்போது, அதன் வேகம் விநாடிக்கு 1 ஜிகாபைட் அளவு இருக்கும் என கூறப்படுகிறது.

பிராட்பேண்ட் வயர்லெஸ் அக்சஸ் அலைக்கற்றையான 4ஜியை, ரூ. 3314.36 கோடிக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு ஏர்டெல் வாங்கியது. கொல்கத்தா,மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா ஆகிய 4 தொலைத்தொடர்பு வட்டங்களுக்கு மட்டுமே இந்த சேவையை வழங்க ஏர்டெல் ஏலம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேப்போன்று, ஏர்செல், டிகோனா, ஆகிரீ, குவல்காம் உள்ளிட்ட நிறுவனங்களும் 4ஜி அலைக்கற்றையை ஏலம் பெற்றுள்ளது.

News Summary:
Bharti Airtel, the biggest telecom services company, launched broadband wireless access or BWA services based on 4G technology in Kolkata today.

வெப்துனியாவைப் படிக்கவும்