’இவரை என் சகோதரன் என அழைக்கிறேன் ’- தோனி நெகிழ்ச்சி

சனி, 25 செப்டம்பர் 2021 (15:37 IST)
பிராவோவை நான் சகோதரன் என்றே அழைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் தோனி.

ஐபிஎல்-14 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. நேற்றைய 35 வது லீக் போட்டியில் சென்னை கிங்ஸ்- பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 156 ரன்கள் எடுத்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற சென்னை அணி பந்துவீச்சாளர் பிராவோ பற்றி தோனி புகழ்ந்து பேசியுள்ளார். அதில்.9 வது ஓவருக்குப் பின் பிட்ச் மெதுவாக மாறியதால் பிராவோவைப் பயன்படுத்தினேன். அவர் இக்கட்டான நேரத்தில் சிறப்பாகப் பந்து வீசுவார் எஅவரை என சகோதரன் என அழைக்கிறேன். அவர் ஒரே ஓவரில் 6 பந்துகளை வெவ்வேறு விதமாக பொறுப்புடன் பந்து வீசினார் எனத் தெரிவித்தார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்