தாமதமாக பந்து வீச்சு : விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஞாயிறு, 24 ஏப்ரல் 2016 (09:24 IST)
நேற்று நடந்த ஐபில் தொடரில் தாமதமாக பந்து வீசியதற்காக பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
 

 
தற்போது ஐபில் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் புனே அணியும் பெங்களூரு அணியும் மோதியது.
 
இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை.
 
எனவே அந்த அணியின் கேப்டன் என்கிற முறையில், விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
 
இந்த தொடரில் தாமதமாக பந்து வீசியதற்காக, முதல் அபராதம் விராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்