8 ஆவது ஐபிஎல் போடியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிகள் மோதின. இதில் பெங்களூர் அணி சேசிங் செய்ய களமிறங்கி தங்களது இன்னிங்சை விளையாடி வந்தது. இதில் பீல்டிங் மேற்கொண்டிருந்த போலார்டுக்கு திடீரென நடுவர் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடுவரின் இச்செயலுக்கு எரிச்சல் அடைந்த போலார்ட், ஒரு டேப்பை வாயில் ஒட்டிக்கொண்டு களத்தில் பீல்டிங் மேற்கொண்டார். இதனால் மைதானத்தில் சில சலசலப்பு ஏற்பட்டது. ரசிகர்களின் சிரிப்பால் அரங்கமே அதிர்ந்தது என்றால் மிகையாகாது.