நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான சுனில் நரின் கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் கிரிகெட் போட்டியின் போது பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கினார். இதன் காரணமாக சுனில் நரின் சர்வதேச போட்டிகளில் பங்குபெறவில்லை. மேலும் பந்து வீச்சு சோதனையில் கலந்து கொண்டு சோதனைக்கு உட்படுத்திய பிறகே தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஐதராபாத்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் சுனில் நரினின் ஆட்டம் விதிமுறைக்கு மாறாக உள்ளதாக அம்பயர்கள் புகார் செய்துள்ளனர். எனினும் வரும் ஆட்டங்களில் சுனில் நரின் பந்து வீசலாம் என்றும், மேலும் பரிசோதனைக்கும் உட்படுத்தபடலாம் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.