8 ஆவது ஐ.பி.எல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கியது. இதில் டெல்லி வீரர்களின் பந்துவீச்சு தாக்குதல் மிக அருமையாக கைகொடுத்ததால் பஞ்சாப் வீரர்கள் செய்வதறியாமல் தவித்தனர்.
இதில் தொடக்க ஆட்டக்காரர் சேவக் 1 ரன்னில் ஏமாற்றினார். ஷான் மார்ஷ், வோரா, சகா, பெய்லி, பெரரா, அக்சர் படேல் ஆகியோர் மிக சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.