இனி மினி ஐபிஎல்: பிசிசிஐ திட்டம்

சனி, 25 ஜூன் 2016 (03:51 IST)
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது


 

 
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆண்டு தோறும் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த ஐபிஎல் ஏறக்குறைய இருமாதங்களுக்கு நடைபெறுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு குறுகிய காலம் நடைபெறும் வகையில் மினி ஐபிஎல் தொடரை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 
 
நடப்பு ஆண்டு முதல் நடத்தப்படவுள்ள இந்த தொடர் மினி ஐபிஎல் நடைபெறும்  தேதி மற்றும் வடிவம் குறித்த அறிவிப்பு தக்க நேரத்தில் வெளியாகும் என்றும் இந்த தொடரில் எட்டு அணிகளும் கலந்து கொள்ளும் என்று  பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்