ஐபிஎல்: இலங்கை வீரர்கள் தடை எதிரொலி - சென்னை மைதானத்தில் மேத்யூஸ் பங்குபெற இயலாது

வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (09:58 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கான தடை நீடிப்பதால், சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் யாரும் களம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 

 
இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா  கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 8 ஆம் தேதி முதல் தொடங்கி மே 24 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. 
 
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் மோதும் லீக் ஆட்டம் வருகிற 9 ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது. மேலும் சென்னை மைதானங்களில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியாததால், டெல்லி அணியில் இருக்கும் இலங்கை வீரர் மேத்யூஸ் இந்த ஆட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது டெல்லி அணிக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்துவது போல் அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்