ஐ.பி.எல். விருது: சிறந்த ‌வீர‌ர் டெண்டுல்கர்- சிறந்த ப‌ந்து‌வீ‌ச்சாள‌ர் ஓஜா தேர்வு

சனி, 24 ஏப்ரல் 2010 (12:51 IST)
ஐ.‌ி.எ‌ல் ‌கி‌‌ரி‌க்கெ‌டபோ‌ட்டி‌யி‌ன் ‌சிற‌ந்பே‌ட்‌ஸ்மேனாச‌ச்‌சி‌னடெ‌ண்டு‌ல்க‌ரு‌ம், ‌சிற‌ந்ப‌ந்து‌வீ‌ச்சாளராஓஜதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

3வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருது வழங்கும் விழா மும்பையிலநேற்‌றிரவு நடைபெ‌ற்றது.

இ‌தி‌லசிறந்த பேட்ஸ்மேனாக டெண்டுல்கர் தேர்வு பெற்றார். அவர் 14 ஆட்டத்தில் 570 ரன்கள் எடுத்து உள்ளார். காலிஸ், உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய் ஆகியோரும் இதற்கான பட்டியலில் இருந்தனர்.

சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான பரிந்துரையில் ஒஜா (டெக்கான்), அஸ்வின் (சென்னை), ஜாகீர்கான் (மும்பை), வினய்குமார் (பெங்களூர்), ஹாரிஸ் (டெக்கான்), ஹர்பஜன்சிங் (மும்பை) ஆகியோர் இருந்தனர்.

இதில் ஒஜா சிறந்த பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த புதுமுக வீரர் விருது மும்பை இந்தியன்ஸ் வீரர் போலர்ட்டுக்கு வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்