ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை

வெள்ளி, 23 ஏப்ரல் 2010 (15:47 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டி வரும் ஞாயிறன்று மும்பையில் நடைபெறுகிறது. இதில் நடைபெறும் நிறைவு விழா மற்றும் அதனையொட்டிய கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஐ.பி.எல். ல் சென்னை அணி இறுதிசுற்றை எட்டுவது இது 2 வது முறையாகும். ஏற்கனவே முதலாவது ஐ.பி.எல். போட்டியிலும் (2008 ம் ஆண்டு) இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தது.

சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

போட்டி தொடங்குவதற்கு முன் கலைநிகழ்ச்சிகளும் நிறைவு விழாவும் நடக்கிறது.

இதில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. பிரபல பாடகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்