கோலியின் கேப்டன்சியை மெச்சிய கம்பீர்… கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சர்யம்!

வியாழன், 22 அக்டோபர் 2020 (15:28 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் நேற்றைய போட்டியில் கோலி கேப்டன்சி சிறப்பாக இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியை மிக எளிதாக வென்றது ஆர்சிபி. முதலில் பந்துவீசிய அந்த அணி 84 ரன்களுக்குள் கே கே ஆரை சுருட்டியது. அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 ஓவர்களில் 3 விக்கெட்களை எடுத்து 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். எப்போதும் அவரை பவர்பிளேயில் பயன்படுத்தாத கோலி நேற்று பயன்படுத்தியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோலியின் இந்த முடிவை கவுதம் கம்பீர் வெகுவாக பாராட்டியுள்ளார். கோலி மற்றும் கம்பீருக்கு இடையே மைதானத்துக்கு உள்ளேயே பல முறை மோதல்கள் வெடித்துள்ளன. அதுபொல கம்பீர் கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் முதல்முறையாக அவரைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்