இதே அணியோடு வந்து தோனி சாதித்துக் காட்டுவார் – ஓவர் கான்பிடன்ஸில் நெக்ரா!

வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:49 IST)
சிஎஸ்கே அணியில் அடுத்த ஆண்டு மிகப்பெரிய மாற்றம் இருக்காது என ஆஷிஷ் நெக்ரா தெரிவித்துள்ளார்.

அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ப்ளே ஆஃப் தகுதியை இழந்த முதல் அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தோல்விக்கு கேப்டன் தோனியின் போதாமையே காரணம் என சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு அணி கேப்டன் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது இதுவே முதல்முறை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் தேவை இருக்காது. இதே அணியோடு வந்து தோனி சாதித்துக் காட்டுவார். ஐபிஎல் தொடரில் நான் 39 வயது வரை விளையாடினேன். நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர். நானே 39 வயது வரை விளையாட முடிந்தது. அடுத்த ஆண்டு வாட்சன் கூட இருக்க முடியும். இந்த ஒரு சீசனை வைத்து எடைபோட முடியாது. அடுத்த சீசனில் இதே பழைய சிஎஸ்கே திரும்ப வருவார்கள்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்