தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (பல்லு பல்லாக நறுக்கியது)
ஆப்பசோடா - 1 சிட்டிகை
முந்திரி - 8 நறுக்கியது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள்.
ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள்.
இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக வைத்து எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.