கோதுமை மாவு - 250 கிராம் கேரட் - 200 கிராம் கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு பீட்ரூட் - 100 கிராம் வெங்காயம் - 200 கிராம் உப்பு, கறிமசால், மிளகாய்த்தூள் - சிறிதளவு
செய்யும் முறை
கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவி வைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவில் துருவிய கேரட், பீட்ரூட், உப்பு, மிளகாய்த்தூள் (தேவைக்கேற்ப) கறிமசால், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் போட்டு, சப்பாத்தி மாவு போல் நைசாக பிசைந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
30 நிமிடம் கழித்து ரொட்டி போல் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டு சாப்பிடவும். சுவையாக இருக்கும்.