காலையில் செய்த இட்லி மீந்துவிட்டதா? உடனடியாக உப்மா செய்யாலாம் என யோசிக்காமல், இந்த மஞ்சூரியனை செய்து பாருங்கள். மாலை நேர டிப்பனுக்கு இந்த இட்லி மஞ்சூரியன் சூப்பராக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து இதில் இட்லி துண்டுகளை நன்றாக பிரட்டி பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்
இதனுடன் மிளகாய் தூள், சோயா மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கிரேவியாக சமைக்கவும்.
இந்த கிரேவியில் ஏற்கனவே பொரித்துவைத்த இட்லியை சேர்த்து 2 நிமிடங்கள் சமைத்தால் சூடான, சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.