ஒகேனக்கல்லில் களைகட்டும் பரிசல் சவாரி

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:18 IST)
கோடை விடுமுறையையொட்டி பல்வேறு சுற்றுலாத் தளங்களும் தற்போது களைகட்டியுள்ளது. அதில் ஒகேனக்கல் பரிசல் சவாரியும் ஒன்று.

ஒகேனக்கல்லில் உள்ள அருவிக்கு அருகில் இருக்கும் ஓடை போன்ற ஒரு அமைப்பில் பரிசல் சவாரி நடைபெறுகிறது. பாறைகளுக்கு இடையே செல்லும் இந்த படகு சவாரி நிச்சயம் எல்லோரையும் கவரும்.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் நிச்சயம் பரிசல் சவாரியை விடுவதில்லை. இதனால் பரிசல் சவாரி எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தற்போது களை கட்டியுள்ளது.

அடடா இதுவரை ஒகேனக்கல் நமது சிந்தனையில் வரவில்லையே என்று நீங்கள் உச்சுக் கொட்டுவது தெரிகிறது.

எல்லா இடத்திற்கும் போயாச்சு, வேறு எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருக்காதீர்கள். இன்னும் ஒரு சில நாட்கள் தான் உள்ளன. உடனே கிளம்புங்கள் ஒகேனக்கல்லுக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்