ஊட்டியில் ரோஜா கண்காட்சி

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:17 IST)
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவில் ரோஜா, மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சி நடக்கிறது.

கோடை விழா துவக்கமாக ஊட்டி ரோஜா பூங்காவில் நேற்று காலை ரோஜா கண்காட்சி தொடங்கியது.

8 ஆயிரம் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர்க்கோபுரம், அழ‌கிய வ‌ண்ண ரோஜா‌க்களை‌க் கொ‌ண்டு உருவா‌க்க‌ப்ப‌ட்ட மயில், குதிரை வண்டி, குத்துவிளக்கு, ரங்கோலி போன்றவை அமைக்கப்பட்டிருந்தன.

கொய் மலர், ஏற்றுமதி ரோஜா மலர் அரங்குகள் உள்ளன. இதை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ரசி‌த்து செ‌ல்‌கி‌ன்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்