பற்களை மீண்டும் முளைக்க வைக்கலாம்
புதன், 3 பிப்ரவரி 2010 (17:04 IST)
விபத்திலோ, ஏதேனும் நோய் தாக்கியோ பற்கள் விழுந்துவிட்டாலோ, உடைந்து விட்டாலோ செயற்கைப் பல் பொருத்துதல், தங்கப்பல் பொருத்துதல் போன்றவை மட்டுமே ஒரே வழியாக இருந்தது.
தற்போது அனைத்திலும் சிறந்த வழியாக உலகில் முதல் முறையாக ஸ்டெம் செல் முறையில் புதிய பற்களை மீண்டும் முளைக்க வைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.
ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இதற்காக எலிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இந்த ஆய்வில் வெற்றி கிட்டியுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், இயற்கையான பற்களைப் போல் இவற்றுக்கு ரத்த ஓட்டம் சீரா கிடைக்கிறது.
பளிச்சென்ற எனாமலும், உணவை அரைத்துக் கொடுப்பதிலும் எந்த வித சிரமங்களும் இல்லை. ஆனால் ஒரு மனிதனுக்கு ஸ்டெம்செல் முறையில் பற்களை முளைக்க வைக்க ஒரு ஆண்டு ஆகும் என்று கருதப்படுகிறது.