ஜனவரி 2 இந்தியாவில் வெளியாகும் ஜோலியின் அன்புரோக்கன்

சனி, 27 டிசம்பர் 2014 (14:29 IST)
ஏஞ்சலினா ஜோலி இயக்கியிருக்கும் இரண்டாவது படம், அன்புரோக்கன். கிறிஸ்மஸ் தினத்தில் யுஎஸ்ஸில் வெளியான இப்படம் ஜனவரி 2 -ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.
இரண்டாம் உலகப் போரை மையப்படுத்திய இந்தப் படத்தில் முன்னாள் ஒலிம்பிக் வீரர் லூயிஸ் ஸம்பெர்னி விசாரணை கைதியாக பிடிக்கப்பட்ட சம்பவத்தை ஜோலி படமாக்கியிருக்கிறார். படத்துக்கான திரைக்கதையை ஆஸ்கர் வென்ற இயக்குனர்களான ஜோய்ல் கொய்ன், ஈதன் கொய்ன் எழுதியுள்ளனர்.
 
நாவலை அடிப்படையாக வைத்து அன்புரோக்கன் தயாராகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்