பெண்களின் பொருளாதார விடுதலை, ஏன் நான் மட்டும் அதை செய்யணும்? ஏன் அதை நான் செய்யக் கூடாது? என்று ஆண்களை நோக்கி கேள்விகளை எழுப்புகிறது. ஆணாதிக்கத்துக்கு அவர்கள் அடிபணிய மறுக்கிறார்கள். ஆண்களின் ஈகோ அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பெரும்பாலான காதல் மற்றும் மண முறிவுக்கு இந்த ஈகோதான் முதல் வில்லனாக உள்ளது. அப்பாவி ஆணும், அடங்கா பெண்ணுமாக சில காம்பினேஷன்களும் இருக்கத்தான் செய்கின்றன.