காஞ்சிபுரம் காமாட்சி கோவிலின் சிறப்புகள்..!

Mahendran

வியாழன், 27 ஜூன் 2024 (19:55 IST)
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பலநூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கோயில். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது, பின்னர் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கப்பட்டது. ஆதிசங்கரர் இங்குதான் "ஆனந்த லஹரி" பாடலை இயற்றினார். காஞ்சி காமகோடி பீடத்தின் தலைமையிடம் இங்கு தான் உள்ளது
 
காமாட்சி அம்மன் என்றழைக்கப்படும் லலிதாம்பிகை, ஞானம், சக்தி, செல்வம் அருளும் தெய்வம். நவகிரக தோஷம் நீங்குவதற்கும், திருமணம், குழந்தைப்பேறு போன்ற காரியங்களுக்கும் பெயர் பெற்றது. 52 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
 
1000-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் நிறைந்த அழகிய கோயில். 5 நிலைகளைக் கொண்ட கோபுரம். காமாட்சி அம்மன், விஷ்ணு, வராஹி, காசி விஸ்வநாதர், சண்டிகேஸ்வரி போன்ற பல  1000-க்கும் மேற்பட்ட லிங்கங்கள் கொண்ட "சகஸ்ர லிங்க சன்னதி" பிரசித்தி பெற்றது.
 
தினமும் 6 கால பூஜைகள் நடைபெறும். ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பிரமோற்சவம், வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, நவராத்திரி போன்ற விழாக்கள் மிகவும் பிரபலம்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்