தேவாலயங்களில் இன்று புனித வெள்ளி ஆராதனை !

வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (22:27 IST)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிறந்து, சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்துவைப் பின்பற்றப்படுவர்களால் நம்பப்படுகிறது.

அதன்படி, கிறிஸ்தவர்கள் வாழ்வில் தவக் காலம் முக்கியமான காலக்கட்டம் ஆகும். இதை புனிதவாரம் என்று அழைப்பார்கள்.

இயேசு நாளை சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள், கெத்சமாஎ தோட்டத்தில், இரவில், தேவனிடம் கண்ணீருடன் ஜெபித்தார். இதுதான் பெரிய  வியாழக்கிழமை என்று அழைக்கப்படுகிறது.

இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வை நினைவுகூறும் வகையில், புனித வெள்ளி தினம்  கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, இன்று  காலையில், டி.இ.எல்.சி. சி.எஸ்.ஐ,ஆர்.சி உள்ளிட்ட அனைத்து திருச்சபைகளிலும் புனித வெள்ளி ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்த்கொண்டு வழிபட்டனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்