பின்னர் இளைஞன் அந்த முனிவரைப் பார்த்து முனிவரே, நீங்கள் சிங்கத்தை முதலில் கொன்றீர்கள். பின்னர் அதை உயிர் பிழைக்க வைத்தீர்கள். இதனால் நீங்கள் பெற்ற பலன் என்ன? இதனால் என்ன ஆன்மிக பணியை நீங்கள்செய்தீர்கள்? இந்த சித்து விளையாட்டு இறைவனை நீங்கள் எளிதாகக் காண உங்களுக்கு உதவி புரியுமா? இறைவனின் அருளைப் பெற்ற ஒருவன் விலை மதிப்பில்லாத ஞானம், வைராக்கியம், பக்தி இவற்றை விட்டுவிட்டு சித்து விளையாட்டுகளைச் செய்ய ஆரம்பிப்பது தவறு இல்லையா? இந்த மந்திர தந்திரங்கள் எல்லாம் இறைவனுக்குப் பிடிக்குமா? கடவுளை அடைய இவையெல்லாம் தடை அல்லவா? என்றான்.