ஏழரைச்சனி நீங்க ஆஞ்சநேயரை வழிபடுங்கள்..!

வியாழன், 14 செப்டம்பர் 2023 (18:32 IST)
ஏழரை சனி என்பது ஒவ்வொரு மனிதனையும் ஆட்டி படைக்கும் என்பதும் அந்த காலகட்டத்தில்  ஏராளமான சோதனைகளை சந்திப்பார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஏழரை சனி நேரத்தில் ஆஞ்சநேயரை வழிபாட்டால்  எந்த பிரச்சனை வந்தாலும் அது விலகி விடும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர் 
 
 ஏழரைச் சனி என்பது எல்லோருக்கும் வரும் என்றாலும் ஆஞ்சநேயரை மட்டும் ஏழரை சனி தாக்காது. அந்த வகையில்   சனீஸ்வரர் இடம் என்னை விட்டு நீ விலகியது போல்  என்னை வழிபடும் பக்தர்களுக்கும் எந்த தொந்தரவையும் சங்கடத்தையும் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாகவும் வரலாறு உண்டு.
 
சனி பகவான் அதற்கு சம்மதித்தாகவும் எனவே ஏழரை சனி அஷ்டமச் சனியின் போது நமது துயரங்கள் விலக ஆஞ்சநேயரை வழிபட்டால் பக்தர்கள் சனி பகவானிடம் இருந்து விடுபடலாம் என்று ஆன்மீகவாதிகள் கூறுவது உண்டு 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்