குங்குமப்பூவை பயன்படுத்தி சிம்பிள் ஃபேஸ்பேக் செய்வது எப்படி..?

முக அழகினைக் கூட்டுவதில் குங்குமப்பூ முக்கிய பங்கு வகிக்கின்றது. கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் பங்கு குங்குமத்திற்கு உண்டு.

முகத்தினை பளபளவென்று மாற்றுவதில் குங்குமப்பூ முக்கிய பங்கு வகிக்கின்றது, அந்த குங்குமப்பூவில் ஃபேஸ்பேக்கினை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
 
குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்தசெல்கள் நீங்கி, முகம் பொலிவடையும்.
 
ப்ரஷ் க்ரீம் உடன் சேர்த்தும் ஃபேஸ்பேக் போடலாம். அதற்கு க்ரஷ் க்ரீமுடன் குங்குமப்பூவை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து, பின் அதன் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், சருமம் மென்மையாகவும், வெள்ளையாகவும் மாறும்.
 
தேவையானவை: குங்குமப்பூ 5, நெய் 1 ஸ்பூன், மயோனைஸ் 1 ஸ்பூன். செய்முறை: குங்குமப்பூவினை மயோனைஸில் 1 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். அடுத்து நெய்யினைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
 
இந்த குங்குமப்பூ ஃபேஸ்பேக்கினை முகத்தில் 30 நிமிடங்கள் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும். அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகம் பளபளவென்று இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்