வேப்பிலை என்றதும் முகம் சுளித்துக்கொள்வர். ஏனென்றால் அது மிகவும் கசப்பாக இருக்கும். இளந்தளிர் அவ்வளவாக கசக்காது. அத்துடன் இளந்தளிரில் வைட்டமின் ஏ என்ற உயிர்ச்சத்து அதிகமுள்ளது. அத்துடன் இரும்பு, சுண்ணாம்பு, புரதம் போன்ற சத்துக்களும் சேர்ந்துள்ளன.
4. சிறு குழந்தைகளுக்கு சீதள மிகுதியால் தொல்லை ஏற்படும்போது வேப்பிலை கொழுந்துடன் ஒரு மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் சேர்த்து மைபோல அரைத்து சிறிது நீரில் கலந்து உள்ளுக்கு கொடுக்க தொல்லை நீங்கும்.
5. அம்மை நோய் ஏற்படும் உடலில் தடிப்பு ஏற்படுவதுண்டு. இதனால் அரிப்பும், எரிச்சலும் இருக்கும். இதற்கு வேப்பிலையை மைபோல அரைத்து மேல் பூச்சாக தடவலாம். இதனால் அரிப்பும், எரிச்சலும் நீங்கும்.