மெட்ராஸ் ஐ நோயை சித்தமருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா?

புதன், 7 டிசம்பர் 2022 (20:38 IST)
கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வரும் நிலையில் இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சுத்தமான தண்ணீரில் மஞ்சள் கலந்து, வெள்ளை துணியில் அந்த மஞ்சள் தண்ணீரை நனைத்து அந்த துணியை வைத்து கண்ணை துடைக்க வேண்டும் 
 
மஞ்சள் கிருமி நாசினி என்பதால் கண் எரிச்சல் கண் வலி ஆகியவை இதன் மூலம் நீங்கும் என்றும் சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் மெட்ராஸ் நோய் வராது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்