அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க ஆனால் அகத்தின் மட்டுமல்ல முகத்தின் அழகு கூட கண்களில் தெரியும். நம் எண்ணங்களை, சிரிப்பு, துக்கம், அழுகை என நவ ரசங்களையும் பிரதிபலிப்பதில் கண் முக்கிய பங்குவகிக்கிறது. கண் நம் உடலில் பராமரிக்க வேண்டிய உறுப்புகளில் முதன்மையான ஒன்று. கண்களில் ஏதாவது பிரச்சனை என்றால் நம் உலகமே இருட்டாகிவிடும் போல் இருக்கும். இந்த கண்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நம் நல்வாழ்வுக்கு மிக முக்கியம்.
* கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் கண்களுக்கு நல்லது.
* பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் கண்களின் அழகை பராமரிக்கும் முக்கிய பொருட்கள்.