ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் ஸ்நாப்டீல் நிறுவனம், தற்போது நிலவி வரும் பணப்புழக்க தட்டுப்பாட்டை குறைக்க வீட்டுக்கே வந்து ரூ.2000 தருவதாக அறிவித்துள்ளது. ஸ்நாப்டீல் ஆப்பில் இருக்கும் cash@home வசதியை பயன்படுத்தி ரூ.2000 பணம் பெற்றுக்கொள்ளலாம்.
இதில் புக்கிங் செய்பவர்களுக்கு வீடு தேடி வந்து பணம் கொடுக்கப்படும் என்றும், அதற்கு ரூ.1 சேவை வரியாக வசூலிக்கப்படும் என்று அதன் நிறுவனர் தெரிவித்தார். மேலும் இந்த சேவை பெங்களூர் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இந்த சேவையை எதிர்பார்க்கலாம்.