பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன: சென்செக்ஸ் 50 புள்ளிகள் உயர்வு

திங்கள், 25 ஜனவரி 2016 (21:42 IST)
கடந்தவாரம் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றைய பங்குச்சந்தையில் ஏற்றத்துடன் முடிந்தன.


 
 
இந்திய பங்குச்சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று உயர்வுடன் முடிந்துள்ளது. கடந்தவாரம் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்த நிலையில் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியது. இன்றைய பங்குசந்தையில் இன்று முழுவதும் தொடர்ந்து உயர்வுடனேயே முடிந்துள்ளது
 
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 50.29 புள்ளிகள் உயர்ந்து 24,485.95ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 13.70 புள்ளிகள் உயர்ந்து 7,436.15 ஆகவும் இன்றைய வரத்தகநேர முடிவில் முடிந்தன.
 
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 15 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்