வட்டி விகிதம் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளிட்டவை, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரிடமிருந்து மாற்றியமைக்கும் வகையில், இந்திய நிதி தொடர்பான விதிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்குமுன்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஒரு தொழில்நுட்ப குழுவுடன் ஆலோசனை நடத்தும் போதும், முடிவுகளை எடுக்கும்போது அந்தக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி செயல்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது பின்பற்றப்படுவதில்லை.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்த வரைவு முதன்முதலில் அளிக்கப்பட்டபோதும், இந்தக் குழு பற்றி அதில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது என்றாலும், அந்தக் குழுவின் பெரும்பான்மை முடிவுக்கு எதிராக ஆளுநர் முடிவுகளை எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.