2 நாட்களில் ரூ.2 லட்சம் வரை கடன்: பேடிஎம் அதிரடி ஆஃபர்

சனி, 3 செப்டம்பர் 2016 (17:25 IST)
சீன நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் மிகப்பெரிய முதலீட்டில் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்றுள்ளது பேடிஎம் நிறுவனம். 


 
 
பேடிஎம் நிறுவனம் அடுத்தச் சில மாதங்களில் தனது வாடிக்கையாளர்களுக்குத் தனிநபர் கடன் வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது.
 
இத்திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் 5,000 முதல் 10,000 ரூபாய் வரையிலான கடனை அளிக்கவும், 2 நாட்களுக்குள் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடனை அளிக்க உள்ளதாகவும் பேடிஎம் நிறுவனத்தின் துணைத்தலைவர் கிருஷ்ணா தெரிவித்தார். 
 
தற்போது பேடிஎம் நிறுவனம் தனியாகப் பேமெண்ட் வங்கியை உருவாக்கி வரும் நிலையில், இக்கடன் திட்டத்தை 10 வங்கிகளுடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்