இது குறித்து உலகளவிலான மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய செல்போன் சந்தையில், அடுத்த நிதியாண்டில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால் பதிக்க உள்ளது.
அதே சமயம் மலிவு விலையிலான ஸ்மார்ட் போன்கள் அதிகளவில் விற்பனையாவதால், டேட்டா இணைப்பை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதன் மூலம், மொத்த வருவாயில் டேட்டா இணைப்பின் பங்களிப்பு 25 முதல் 27 சதவீதம் [தற்போது 18 -20 சதவீதம்] வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.