தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 504 ரூபாய் உயர்வு

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (11:51 IST)
தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 504 ரூபாய் உயர்ந்துள்ளது, இதனால் 22 காரட் தங்கம் சவரன் 20,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்நது உயர்ந்து வருகின்றது.

இம்மாதம் 11 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை  சவரன் ஒன்றுக்கு 19 ஆயிரத்து 312 ரூபாயாக குறைந்திருந்தது. 
 
இந்நிலையில் இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது.

அதன்படி 22 காரட் தங்கம் சவரனுக்கு 504 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.20,568 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
இதேபோல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி 690 ரூபாய் உயர்ந்து, 1 கிலோ வெள்ளி  ரூ 36,980 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்