அந்தத் திட்டத்தின் கீழ், 2 கிராம் தங்கத்தின் மதிப்புடைய பத்திரங்களை மத்திய அரசு வெளியிடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் அதிகபட்சமாக 500 கிராம் வரையிலான தங்கத்தின் மதிப்புக்கு பத்திரங்களை வாங்கலாம்.
தங்கப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை வழங்கப்படும், இந்த விண்ணப்பங்கள் நவம்பர் 26 ஆம் தேதி ஏற்கப்படும். இந்த பத்திரங்கள் வங்கிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளன.