விற்பனை, மற்றும் பொருட்கள் பிரிவுகளில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும், துறை சார்ந்த நிபுணர்கள் விற்பனையை கவனித்துக் கொண்டதாகவும் இதனால் பல புதிய பிரிவுகளில் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்ய முடிந்ததாகவும் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இணைய சில்லறை வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பல சலுகைகளை வழங்கி வருகின்றனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாக 40 மில்லியன் பொருட்களை பிளிப்கார்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அமேசான் நிறுவனம் 2015 ஆம் ஆண்டை விட மூன்று மடங்க அதிகமாக 80 மில்லியன் பொருட்களை விற்பனை செய்து உள்ளது.